எங்களோடு வரப்போகின்றாயா அல்லது உன் தங்கச்சியைக் கூட்டிக்கொண்டு போகட்டுமா.. சில அதிகாரக் குரல்கள் நிதர்சனை நிலைகுலைய வைத்தன. ஐயோ தம்பி என் புள்ளைய விட்டுடுங்க… என்ர தலைப்புள்ள அவன்.. உங்களுக்கு புண்ணியமாப் போகுமையா.. அவனை விட்டுடுங்க… அவன் பச்சப்பாலகன் தம்பி, இப்பத்தான் பதினாறு தொடங்கினது. அவனுக்கு ஒண்ணும் தெரியாது..விட்டுடுங்க எம் புள்ளையை… என்று அந்த அதிகாரக் குரல்களுக்குச் சொந்தக்காரர்களின் கால்களைப் பிடிக்காத குறையாகக் கெஞ்சினாள் அவன் தாய் சீதாலக்மி.. இங்க பாருங்க அம்மா, குடும்பத்திற்கு ஒருத்தர் கட்டாயம்
Read Moreநீ கழற்றி வைத்த சரத்தில் ஒட்டியிருந்த மல்லிப்பூ சொல்லும் உன் கூந்தலின் வாசத்தை… நீ என் கண் காண காத்திருக்கையில் மலரும் செம்பரு சொல்லும் உன் பெண்மையின் மென்னையை… நீ சிரிக்கையில் சிந்தும் சங்கதி சொல்லும் உன் குரலின் இனிமையை… நீ வாசல் வரும் போது பொன் அள்ளித்தூவும் மஞ்சள் மலரணி சொல்லும் உன் மேனியின் வண்ணத்தை… நீ கண்களில் இட்ட மை சொல்லும் உன் கண்கள் பேசும் காதல் மொழிகளை… நீ பணிவில் என்னிடம் காட்டும்
Read Moreகாலைநேர பனிக் காற்றில் உன் வரவிற்காய் பல மணிநேரம் காத்திருந்த போது கிடைத்த இன்பம்… வெறும் கண் பாசைதான் பேசினோமேயாயினும் அது இருவருக்கும் புரிந்ததில் கிடைத்த இன்பம்… வெள்ளிக் கொலுசு கட்டிய – உன் கால்கள் தினம் போட்ட கோலங்களை பார்த்து இரதித்ததில் கிடைத்த இன்பம்… கண்ணுக்குள் ஊடுருவும் என் பார்வையை ஏதேதோ ஜாலங்கள் செய்து தடுப்பாயே அப்போது கிடைத்த இன்பம்… பள்ளிசெல்ல முன் உந்தன் தரிசனத்தை நான் பெறுவதற்தாய் நான் வரும்வரை வரும் பேருந்துகளை எல்லாம்
Read Moreகணணி மென்பொருள் வல்லுனர்கள் சின்னக் குறும்புத்தனம் மிக்கவர்கள் என்று முன்னர் கேள்விப்பட்டு இருக்கின்றேன். தாங்கள் வடிவமைக்கும் மென்பொருளில் சின்னச் சின்னக் குறும்புகளினைச் செய்து அது தெரியாமல் மறைத்து ஒரு மறைபொருளாக உருவாக்கிவிடுவதில் கெட்டிக்காரர்கள். இவ்வாறான மறைக்கப்பட்ட சில செய்திகள் பின்நாட்களில் வெளிக் கொணரப்படும் போது அவை அம் மென்பொருளினைப் பாவிப்பவர்களின் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுவிடுவது உண்டு. அத்ததைய மறைக்கப்பட்ட செய்திகள் Easter Egg எனக் குறிப்பிடுவதுண்டு. முகப்புத்தகம் என்னும் Facebook அண்மைக்காலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற
Read Moreஉலகெங்கும் பன்றிக் காய்ச்சல் பயப்பீதியால் நாடுகள் பல அலறிக் கொண்டிருக்கின்றன. ஐயோடா.. எங்கே எமது நாட்டுக்கும் வந்துவி்டக்கூடாது என்பதனால் பலநாடுகளின் விமானநிலையங்களில் பலவட்டக் கண்காணிப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. Swine influenza virus என்னும் அந்த உயிர்க்கொல்லி வைரஸ் பன்றகளில் [ pigs (swine) ] இருந்து மனிதனுக்குப் பரவியதாம். எனவே பன்றி என்றாலே அலறிக்கொண்டு ஓடுகின்றார்கள் மனிதர்கள். ஆனால் இந்த சிறுமியைப் பாருங்கள். எனக்கென்ன பயம்… பன்றி என்ன பன்றி… I’m so love swine.. என்று கண்கள்
Read Moreஇன்று வேலை முடித்து வீடு வந்து சற்று ஆறுதலாகப் பத்திரிகையைப் பார்ப்போம் என்று பார்த்தால் மிகவும் அநாகரிகமான கீழ்த்தரமான சிங்கள இனவாதத்தின் உச்சக்கட்ட வெறியாட்டம் கண்ணிற்பட்டது. மிகவும் ஒரு மனித நாகரீகமற்ற காடைத்தனமான நடவடிக்கையினை இறக்குவானை முத்துமாரி அம்மன் கோவில் உற்சப ஏற்பாட்டுகளில் காட்டியிருந்தது, வெளியுலகத்திற்கு சமவாதம் பேசும் சிங்களம். இறக்குவானை முத்துமாரி அம்மன் கோவில் திருவிழா இம்முறை இனவாத சிங்களக் காடைக்குழுக்களின் மிரட்டலையடுத்து பிற்போடப்பட்டுள்ளது. இதுவே அந்தச் செய்தி. இரத்தினபுரி மாவட்டத்தில் அமைந்துள்ள இறக்குவானை முத்துமாரி
Read Moreஉங்களின் வலைப்பூக்களில் சின்னதா சில படங்களினை அனிமேசன் பண்ணவிட்டால் எப்படியிருக்கும் வலைப்பூ இன்னும் அழகாக மாறும் இல்லையா..! இணையத்தில் சின்னத் தேடலின் பின்னர் இந்த அற்புதமான விடையம் கண்ணிற்பட்டது… Flickr அல்லது Picasa வில் உள்ள ஒரு album த்தின் RSS Feed தொடுப்பினைக் கொண்டு மிக நேர்த்தியான அழகான பட அனிமேசனை உருவாக்கிக்கொண்ணலாம். நீங்கள் விரும்பும் அளவினில் பின்புற நிறத்தினையும் transparent ஆக வைத்துக்கொள்ள முடியும் – ( by using Use background transparency
Read Moreமாசிப் பனியின் இதமான புதுக்காற்று முகத்தில் சில்லென தடவிச்செல்ல மெல்லக் கண் திறந்து ஜன்னல் திரையை விலக்கி எட்டிப் பார்த்தது நிலவு. கதிரவனின் பொற் கதிர்கள் அந்த நிலவின் பொன்முகத்தில் பட்டு பரவியதோ என்னமோ திடீர் என்று பொன் ஒளி அந்த அறையெங்கும் பரவிப் பிரகாசித்தது. எப்பொழுதும் பெளவியமாக இருக்கும் அந்த நிலவின் முகத்தில் இன்று ஏனோ ஓர் சோகம் மெல்ல இழையோடியிருந்தது. பனிக்காற்றின் இதத்தை மெல்ல உள்மூச்சின் முலம் வாங்கி தன் இருதய நாளங்களுக்கு அனுப்பிவிட்டு
Read Moreதனது பாரம்பரிய வாழ் நிலங்களிலே சந்தோமாக பல வண்ணக் கனவுகளுடன் வாழ்ந்து, இன்று தமது வாழ் நிலங்களில் இருந்து துரத்தியடிக்கப்பட்டு வாழ்க்கையில் அனைத்து சந்தோசங்களையும் இழந்து எதிலிக்கப்பட்டு தமது ஜீவ நாடியினைக் காப்பாற்றுவதற்காக வாழ்வின் கடைசி வினாடி வரை போராடிக் கொண்டிருக்கும் எம் உறவுகளின் அனைத்து துயரங்களும் நீங்கி மீண்டும் அவர்களின் சுயமும் மகிழ்ச்சியும் அவர்களிடமே வந்து சேர பிறக்கின்ற விரோதி வருடம் வழிகோல இறைவனைப் பிரார்த்திப்போம்..! அனைவருக்கும் இனிய புதுவருட வாழ்த்துக்கள்…
Read More20 சதுர கிலோமீற்றர் பரப்பளவுள்ள மிகக் குறுகிய நிலப்பரப்பிற்குள் இரண்டரை இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் எந்த விதமான அடிப்படை வசதிகளும் இன்றி நாள்தோறும் அல்லற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். எந்த நேரத்திலும் மரணம் என்னும் அரக்கன் அவர்களை மிகக் கொடுமையாக விழுங்கி விடக்கூடும். மரணம் என்பது தவிர்க்கக் கூடியது அல்ல. ஆனால் அம்மரணம் எவ்வாறு வருகின்றது என்பதுதான் அவர்களுக்கு மிகக் கொடுமையான விடையம். கண் முன்னே பெற்ற தாய் தந்தையர், பெற்ற பிள்ளைகள் உடல் சிதறி குற்றுயிராய்க் கிடக்கும் போது
Read More