Category: பாதித்தவை
1963ம் ஆண்டளவில் Bob Dylan என்பவரால் எழுதப்பட்ட “Blowin’ in the Wind” என்ற அந்த ஆங்கிலப் கவிதை ஏனோ என்னை மிகவும் ஆழமாகக் கவர்ந்திருந்தது. ஆங்கில இலக்கியத்தினை பள்ளியில் ஒரு விருப்பத்திற்குரிய பாடமாகத் தெரிவு செய்தவர்கள் இந்த ஆங்கிலக் கவிதையை சுவைத்திருப்பார்கள் இரசித்திருப்பார்கள். அண்மையில் நண்பன் ஒருவனின் facebook status ஒன்றில் இந்தக் கவிதையின் சில வரிகளை நீண்ட காலத்திற்குப் பின்னர் கண்டேன். இப்போது மீண்டும் சில ஞாபகங்களைத் தூசு தட்டுவதற்காகவும் வேறு பல பகிரங்கமாகக்
Read Moreகவிதாயினி தாமரை. பெயரைப் போலவே அழகான தாமரை மலர் போல சிரித்த முகம். எப்போதும் வாடாத மலர் போல புன்சிர்ப்புப் பூத்திருக்கும் சிவந்த முகம். அவரின் கவிதைகள் அதனை விட அழகு. கவிதாயினி என்றவுடனேயே மனதிற்கு வருவது “கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்” என்ற சுப்ரமணியபுரப் பாடல். அழகான தமிழ் வரிகளினால் கேட்பவர்களையெல்லாம் கட்டி இழுத்தவர் தாமரை. கவிதாயினி தமிழ் திரையுலகின் முதல் பெண் பாடலாசிரியர். திரையுலகப் பாடலாசிரியராக ஆக வேண்டும் என்ற ஆசையில் பொறியியலாளராகப்
Read Moreகாலைநேர பனிக் காற்றில் உன் வரவிற்காய் பல மணிநேரம் காத்திருந்த போது கிடைத்த இன்பம்… வெறும் கண் பாசைதான் பேசினோமேயாயினும் அது இருவருக்கும் புரிந்ததில் கிடைத்த இன்பம்… வெள்ளிக் கொலுசு கட்டிய – உன் கால்கள் தினம் போட்ட கோலங்களை பார்த்து இரதித்ததில் கிடைத்த இன்பம்… கண்ணுக்குள் ஊடுருவும் என் பார்வையை ஏதேதோ ஜாலங்கள் செய்து தடுப்பாயே அப்போது கிடைத்த இன்பம்… பள்ளிசெல்ல முன் உந்தன் தரிசனத்தை நான் பெறுவதற்தாய் நான் வரும்வரை வரும் பேருந்துகளை எல்லாம்
Read Moreஇன்று வேலை முடித்து வீடு வந்து சற்று ஆறுதலாகப் பத்திரிகையைப் பார்ப்போம் என்று பார்த்தால் மிகவும் அநாகரிகமான கீழ்த்தரமான சிங்கள இனவாதத்தின் உச்சக்கட்ட வெறியாட்டம் கண்ணிற்பட்டது. மிகவும் ஒரு மனித நாகரீகமற்ற காடைத்தனமான நடவடிக்கையினை இறக்குவானை முத்துமாரி அம்மன் கோவில் உற்சப ஏற்பாட்டுகளில் காட்டியிருந்தது, வெளியுலகத்திற்கு சமவாதம் பேசும் சிங்களம். இறக்குவானை முத்துமாரி அம்மன் கோவில் திருவிழா இம்முறை இனவாத சிங்களக் காடைக்குழுக்களின் மிரட்டலையடுத்து பிற்போடப்பட்டுள்ளது. இதுவே அந்தச் செய்தி. இரத்தினபுரி மாவட்டத்தில் அமைந்துள்ள இறக்குவானை முத்துமாரி
Read Moreநீண்ட காலத்தின் பின்னர் இன்று குயிலின் இனிய கூவும் குரலினைக் கேட்டேன். கற்பனைக்கு உடனடியாகச் சென்றுவிடாதீர்கள் உண்மையில் நான் சொல்ல வந்தது குயில் என்னும் பறவையினைப் பற்றித்தான். ஒரு சின்னப் பறவைக்குள் என்ன ஒரு கம்பீரமான கணீர் என்ன குரல் அடங்கியிருக்கின்றது. தன் ஜோடிக் குயிலினை என்ன அழகாகக் கூவியழைக்கின்றது அந்தப் பறவை. என்ன ஒரு இனிமையான குரல். கேட்பவர்களை மயக்கும் மன்மதக் குரல். எந்தவிதமான கரகரப்புக்களும் இன்றி தெளிவாக ஒலிக்கும் குரல். இளவேனிற் காலம் என்றாலே
Read Moreஎனக்கு நீண்ட நாட்களாக ஒரு சந்தேகம் மனதில் ஓர் மூலையில் இருந்துகொண்டிருக்கின்றது… எனது பாடசாலைப் பருவத்தில் அதாவது நான் யாழ்ப்பாணம் இந்துக் கல்லுாரியில் உயர்தரம் படித்துக்கொண்டிருந்த காலத்தில் நடந்த நிகழ்வு அது. யாழ்ப்பாணத்தில் உயர்தர வகுப்புப்படிக்கும் மாணவர்கள் தமது பாடசாலை இறுதிக் காலங்களில் உயர்தர மாணவர் ஒன்றுகூடல் (A/L Social) என்னும் நிகழ்ச்சியை நடாத்துவது உண்டு (வேறு மாவட்ட மாணவர்கள் அத்தகைய நிகழ்ச்சியினை நடாத்துகின்றார்களா என்பது எனக்குத் தெரியாது). அதை ஒரு பரம்பரைப் பழக்கம் என்று கூடச்சொல்லலாம்.
Read Moreஇந்த நாகரீகமடைந்த உலகில் மனிதப் பேரவலம் மிக மோசமாக அதுவும் ஒரு அரசாங்கத்தினால் அரங்கேற்றப்படுவது இங்கேதான். அதுவும் தன்னை ஒரு சனநாயக அரசு என நிமிசத்துக்கு நிமிசத்துக்கு கூறிக்கொள்ளும் அரசு தமிழ் மக்களுக்கு நாள்தோறும் அளித்துவரும் சனநாயகப் பரிசுகள் ஏராளம் ஏராளம். அதுவும் வன்னி மக்களுக்கு என்றால் அரசாங்கத்தின் அதிவிசேடமான கவனிப்புக்கள் பல. நாள்தோறும் தவறாது விமானக் குண்டுகள், ஆட்லரி செல்கள், பல்குழல் பீரங்கிகள் எனப் பல வகையான மரண தூதுவர்களை அனுப்பத் தவறுவதில்லை அரசு. இதுவும்
Read Moreசில விடையங்கள் எப்போதும் அழகாக, மனதிற்கு இதமாக அமைந்து விடுகின்றன. தீபாவளிக்கு புது உடுப்பு உடுத்தி, கோவிலுக்கு சென்றுவிட்டு பின் உறவினர் வீடுகளுக்கும் சென்று அவர்களுடன் மகிழ்ச்சியாக சிறிது வேலைப்பழு மற்றும் புறெஜக்ட் வேலைகளை மறந்து உரையாடுவது ஒருவித சந்தோசம்தான்… மனிதன் இத்தகைய கொண்டாட்டங்களைக் கண்டுபிடித்ததே இதற்காகத்தானெ.. மனதிற்குப் பிடித்தவர்களை வாழ்த்துவதும் அவர்களிடம் இருந்து வாழ்த்துக்களைப் பெறுவதும் மனதில் இன்பப் பெருக்கை ஊற்றெடுக்கச் செய்யும் அம்சங்கள். இன்று காலை கண்விழித்ததே எனது கைத்தொலைபேயின் சிணுங்கலைக் கேட்டுத்தான். தித்திக்கும்
Read Moreமழைக்கால மேகம் திரள்கின்ற நேரம் மலைச்சாரலே தாலாட்ட நீராட்ட.. மலர்த்தோட்டம் எதிர் பார்க்கும் இளவேனிற் காலம் பாவையும் ஒரு பூவினம்.. அதை நான் சொல்லவோ…. என்ற அந்தப் பாடல்தான் சிவனொலிபாத மலை பற்றி நினைக்கும் போது என் மனதில் நிழலாடுகின்றது. மார்கழி மாதப் பின்னிரவு நேரத்தில் மலைப்பாதையின் ஓரங்களில் பளிச்சிடும் வீதி விளக்குகள் எம்மை வழிகாட்டி அழைத்துச் சென்றன. வானத்திலிருந்து பூமிக்கு இறங்கும் மின்னல்க் கொடியினைப் போன்று படர்ந்து நீண்டிருந்தது, அந்த நள்ளிரவில் மலைப்பாதை விளக்கு வெளிச்சம்.
Read Moreநாவல்கள் வாசிப்பதிலே அவ்வளவு ஆர்வமில்லாத நான் அவரது கணேஷ் வஸந்த் நாவலைப் படித்ததில் இருந்துதான் அவர்மீது ஆர்வம் கொண்டேன். அதன் பின்பு அவரது நூல்கள் பலவற்றைத் தேடித்தேடி படித்து வந்துள்ளேன். அவரின் எழுத்துக்கள் மீது அவ்வளவு ஈர்ப்பு… அவ்வளவு தூரத்திற்கு என்ன கவர்ந்த நபர் இன்று இல்லை என்று நினைக்கும் பொழுது… மனதை சிறிது இறுக்கவே செய்கின்றது.. மனதின் ஓரத்தில் ஒரு சொட்டுக்கண்ணீர் வழிந்தோடுகிறது… என் மனதைத் தேற்றிக்கொள்ள அவரது படைப்புக்களையே நாடவேண்டியுள்ளது. அவரது படைப்புகளை நான்
Read More