Category: கதை
ஒரு கையில் சின்ன மரப் பொச்சுக்களாலான கூட்டினைத் தாங்கிய படியும் மறு கையில் சொட்டச் சொட்ட இரத்தம் வழிந்த படியும் அவசரமாக வீட்டினை நோக்கி ஓடிவந்து கொண்டிருந்தாள் வாசுகி. “ஒரு கெல்ப் பண்னேண்டா சுதா..” வீட்டுக்குள் தன் ஒரு வயதுக் குழந்தையுடன் விளையாடிக் கொண்டிருந்த சுதாகரை அழைந்தாள். என்ன வாசு எனத் திரும்பிப் பார்த்த சுதாகர் ஏங்கிப்போனான். “என்னடி இது.. வாசு..” அவள் கைகளில் சொட்டிக் கொண்டிருந்த இரத்தத் துளிகளைப் பார்த்து பதறிப் போய் அவள் கைகளைப்
Read Moreமேகத்தில் இருந்து கால் தவறி ஒரு மழைத் துளி விழுந்து விடுகின்றது. கால்தவறித்தான் விழுந்தாலும் அடுத்த சில கணங்களில் சுதாகரித்துக்கொண்டு மெல்ல கீழ் நோக்கி தலையைத் திருப்புகின்றது அந்த துளி. அம்மாடியோவ்.. என்ன ஒரு ஆழத்தில் விடுந்துவிட்டேன்.. என் கதை இத்தோடு முடிந்ததுதான். என எண்ணும் போது கீழ் இருந்து தன்னை யாரோ பலமாக இழுப்பதனை உணர்கின்றது அந்த மழைத்துளி. எத்தனை பலங்கொண்டும் எதிர்த்தும் முடியவில்லை. துளியின் வேகம் அடுத்த கணங்களுக்குள் பலமடங்காகத் தொடங்குகின்றது. கைப்பற்றி தப்பிக்கவும்
Read Moreமொறட்டுவப் பல்கலைக்கழத்தில் கணணிப் பொறியியல் பிரிவில் இறுதியாண்டில் எமது விருப்பத் தெரிவாக இரண்டு பாடங்களை தெரிவு செய்ய முடியும். அப்படி நானும் எனது நண்பர்களான நிமல் மற்றும் ரமணன் ஆகியோர் கணித மாணவர்களுக்கு கசக்கும் என எண்ணும் பாடமான Bio Informatics இனை தெரிவு செய்தோம். சுவாரசியமான பாடம். பலவிதமான புதிய தேடல்களை எங்களுக்குள் விதைத்தது அந்த பாடம். அந்தப் பாடத்தில் வருகின்ற பலசொற்பதங்கள் எமது மூளையில் உற்கார வைக்க முடியாமல் போனாலும் உயிரியல் கூர்ப்புக் கொள்கைகளும்
Read Moreஎன்ன சொல்லுகிறீர்கள் மந்திரியாரே ? ஆம் மகாராணி! நமது மன்னர் போரிலே வெற்றி பெற்று வேங்கிநாட்டு மன்னனை கொன்று படையினரை புறமுதுகு காட்டி ஓட விட்டு விட்டார். பரிவாரங்களுடன் மன்னர் அரண்மனைக்கு வந்துகொண்டிருக்கின்றார். என் மனம் இப்போதுதான் அமைதியுறுகின்றது மந்திரியாரே. மிக்க நன்றி! என் மனமுகந்த தகவலை விளம்பியதற்கு. வாருங்கள் சேடிப் பெண்களே மன்னனை அரண்மனை வாசலிலேயே வைத்து ஆரார்த்தி எடுத்து வரவேற்போம். என்று அந்தப்புரத்து சேடிப்பெண்கள் சதிதம் அரண்மனை வாசலுக்கு விரைந்தாள் சோழ அரசின் மகாராணி
Read Moreமுன்கதை : பீனிக்ஸ் விண்வெளியோடத்தில் இதுவரை மனித சஞ்சாரமே கண்டிராத தடங்களை நோக்கி ஒளியின் வேகத்தில் சீறிப்பாய்ந்து கொண்டிருந்தார்கள் இளம் விஞ்ஞானிகள். பீனிக்ஸின் கலந்துரையாடல் அறையில் தமது பயணத்தின் நோக்கம் பற்றியும் வியாழன் கிரகத்தின் நடத்தை மாற்றம் பற்றியும் விளக்கங்களை பானு தனது சக விஞ்ஞானிகளுக்குக் கொடுத்துக் கொண்டிருந்தான். வியாழனின் மேற்பரப்பில் சடுதியாகத் தோன்றிய ஒளிக்கீற்றின் காரணம் என்ன என அனைவரும் ஆவலோடு பார்த்துக்கொண்டிருந்தார்கள்…. பாகம் 1 || பாகம் 2இனி… பிரபஞ்சத்தின் காரிருளையும் ஊடறுத்து மின்னலெனெப்
Read Moreமுன்கதை : ஆட்டிபிஷல் இன்ரெல்யன்ஸ் என்னும் செயற்கைப் புத்திசாலித்தனத்தை முழுமையாகப் பயன்படுத்தி எந்தவிதமான மனிதக் கட்டுப்பாடுகளும் இல்லாமல் தானாகச் சிந்தித்து செயற்படக்கூடிய பீனிக்ஸ்விண்வெளிக் கப்பலின் துணைக் கப்டன் மஞ்சரி விண்வெளியில் இதுவரை மனித சஞ்சாரமே கண்டிராத தடங்களை நோக்கி தனது இளம் விஞ்ஞானிகள் குழுவுடன் ஒளியின் வேகத்தில் பயணித்துக்கொண்டிருக்கின்றாள்… பாகம் 1இனி… வாங்க மஞ்சரி.. ஆதித்யனின் குரல் அவளை வரவேற்றன. அவனைப் பார்த்து மெல்லச் சிரித்து விட்டு தனக்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் அமர்ந்து கொண்டாள் மஞ்சரி. எல்லோரும்
Read Moreஎல்லைகள் அற்ற இந்தப் பிரபஞ்சத்தின் மூலைமுடுக்கெங்கும் கணப்பொழுதில் சென்றடையக் கூடிய உங்கள் கற்பனைக் குதிரையில் ஏறி என்னோடு சிறிது பயணியுங்கள். நீங்கள் என்றும் கண்டிராத ஒரு அற்புத உலகிற்கு உங்களை அழைத்துச் செல்கின்றேன். “நாங்கள் இன்னும் 480 வினாடிகளில் சூரிய ஈர்ப்புக்கு அப்பால் சென்றுவிடுவோம். இந்த செய்தி மடலுடன் எமக்கும் உங்களுக்குமான இருவழித் தொடர்பு முற்றாக விலகுகின்றது. இன்னும் சரியாக 60 வினாடிகளில் நாங்கள் ஒளியின் வேகத்தினை அடைந்து விடுவோம். எமது இந்தப் பயணத்தின் குறிக்கொள் வெற்றி
Read More‘நேரம் போகுதம்மா.. கெதியா சாப்பாட்டத்தாம்மா…!’ ‘கொஞ்சம் பொறடி, இட்லியை கோப்பையில போட்டுக்கொண்டிருக்கிறேனல்ல…! ‘ ‘இண்டைக்கு முதல் நாளம்மா… நேரத்தோட போகணும்மா… சாப்பாட்ட ஊட்டிவிடம்மா…’ மஞ்சரியின் காலை நேர பரபரப்பு அவள் அம்மாவையும் பாதித்திருந்தது. கணிதத்தினைக் காதலிப்பவள் மஞ்சரி. எப்போதுமே எதையாவது சாதிக்கணும் என்கின்ற தீ அவள் மனதிற்குள் எரிந்து கொண்டே இருக்கும். எவரையும் அனிச்சையாய்த் திரும்பிப்பார்க்க வைக்கும் அழகு. புதுமுக மாணவியாக மொறட்டுவப் பொறியியற் பீடம் நுழையும் நாள் இன்று. ‘ஆறுதலாச் சாப்பிடடி.. இன்னும் நேரம் இருக்கு…’
Read Moreஎங்களோடு வரப்போகின்றாயா அல்லது உன் தங்கச்சியைக் கூட்டிக்கொண்டு போகட்டுமா.. சில அதிகாரக் குரல்கள் நிதர்சனை நிலைகுலைய வைத்தன. ஐயோ தம்பி என் புள்ளைய விட்டுடுங்க… என்ர தலைப்புள்ள அவன்.. உங்களுக்கு புண்ணியமாப் போகுமையா.. அவனை விட்டுடுங்க… அவன் பச்சப்பாலகன் தம்பி, இப்பத்தான் பதினாறு தொடங்கினது. அவனுக்கு ஒண்ணும் தெரியாது..விட்டுடுங்க எம் புள்ளையை… என்று அந்த அதிகாரக் குரல்களுக்குச் சொந்தக்காரர்களின் கால்களைப் பிடிக்காத குறையாகக் கெஞ்சினாள் அவன் தாய் சீதாலக்மி.. இங்க பாருங்க அம்மா, குடும்பத்திற்கு ஒருத்தர் கட்டாயம்
Read Moreமாசிப் பனியின் இதமான புதுக்காற்று முகத்தில் சில்லென தடவிச்செல்ல மெல்லக் கண் திறந்து ஜன்னல் திரையை விலக்கி எட்டிப் பார்த்தது நிலவு. கதிரவனின் பொற் கதிர்கள் அந்த நிலவின் பொன்முகத்தில் பட்டு பரவியதோ என்னமோ திடீர் என்று பொன் ஒளி அந்த அறையெங்கும் பரவிப் பிரகாசித்தது. எப்பொழுதும் பெளவியமாக இருக்கும் அந்த நிலவின் முகத்தில் இன்று ஏனோ ஓர் சோகம் மெல்ல இழையோடியிருந்தது. பனிக்காற்றின் இதத்தை மெல்ல உள்மூச்சின் முலம் வாங்கி தன் இருதய நாளங்களுக்கு அனுப்பிவிட்டு
Read More