Category: இலங்கை
இலங்கையின் தமிழ்ப் பிரதேசங்களின் ஒழுங்கமைந்த வரலாற்று பற்றிப் பார்க்கின்ற போதுதான் முக்கியமான ஒருவிடயத்தினை அவதானிக்க முடிகின்றது. தமிழர்கள் வாழ்கின்ற பகுதிகள் எவற்றிற்கும் ஒரு தொடர்சியான வரலாற்று தெளிவாக இல்லை என்பது அங்கு புலனாகின்றது. தென் இந்தியத் தொடர்புகள், வாணிபம், போர் நடவடிக்கை எனவும் யாழ்ப்பாண வன்னி இராச்சியங்களின் எழுச்சிகளும் வீழ்ச்சிகளும் என ஆங்காங்கே நடந்த சில சம்பவங்களை வைத்துத்தான் தமிழ்ப் பிரதேசங்களின் வரலாற்றினை தொடுக்க வேண்டியிருக்கின்றது. இன்னும் தெளிவாகச் சொல்லப் போனால், தமிழர் பிரதேசங்களின் பிரதேச வாழ்நிலைகளினூடாக
Read More“நீயே பயம் என்னும் இருளை அகற்றி நாளைய பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்கும் சூரியனும் அந்த சந்திரனும்!” கொழும்பு முதல் அம்பாந்தோட்டை வரை எங்கும் காணப்படும் வீதியோர வாழ்த்துப் பதாதைகளில், அனேகமாக சிங்கள மொழியிலும் ஆங்காங்கே தமிழிலும் காணப்படும் வாசகம் அது. Picture-‘Sri Lanka President sworn-in ceremony for a second term’ courtesy Dailymirror.lk மகிந்த இராசபக்சவினது “அரச முடிசூட்டு விழா”(Royal Coronation) இன்று இலங்கை தலைநகர் கொழும்பில் மிகவும் ஆர்ப்பாட்டான முறையில் நடந்தேறியது. பல
Read More“நாங்கள் முன்னர் குடியிருந்தோம். இப்போது இங்கே நாங்கள் மீளக்குடியமர எங்களுக்கு அரசகாணிகளை பகிர்ந்து தாருங்கள்..” யாழ்ப்பாணத்தில் புகையிரத நிலையக் கட்டடத்தில் வந்து தங்கியிருக்கும் 193 சிங்கள குடும்பங்கள் யாழ்ப்பாண அரச அதிபருக்கும் ஜனாதிபதிக்கும் அனுப்பியிருக்கும் மனுவின் சாரம்சம் இது. எங்கள் சொந்த நிலத்தில் சொந்த வீட்டீல் எங்களை வாழவிடாது எல்லாவழிகளையும் மூடிவிட்டு முன்னர் எங்களிடம் வாடகைக்கு குடியிருந்தவர்களுக்கு எங்களுடைய வீடுகளையும் நிலத்தையும் கொடுக்கத் தயாராகின்றது சிங்கள அரசு. 1983 முன்னர் தாங்கள் தமிழ் மக்களோடு ஒன்றாக வாழ்ந்தகவும்
Read Moreவரலாறு கற்றுத் தந்த பாடங்களில் இருந்து மனிதன் எதையாவது கற்றுக் கொள்கின்றானா என்றால் இல்லை என்றே பதில் கூறவேண்டும். எப்போதும் வரலாறு சுழன்று சுழன்ற மனித வாழ்வியலில் மீண்டு வந்துகொண்டே இருக்கும். அது ஒரு வட்டப் பாதை. ஆனால் அந்த வட்டப்பாதையில் இருந்த மனிதன் கற்றுக்கொள்வது என்பது ஒன்றுமே இல்லை. 18 ஆவது அரசியலமைப்பு திருத்தம்(18th Amendment) இலங்கையில் அமுல்படுத்தப்படுவதற்கான காலம் வெகுதூரத்தில் இல்லை. கொஞ்சம் நெஞ்சமாக இருக்கும் ஜனநாயகத்திற்கும் ஒட்டு மொத்தமாக சாவுமணி அடித்து பள்ளத்தாக்கில்
Read Moreஎன்ன சொல்லுகிறீர்கள் மந்திரியாரே ? ஆம் மகாராணி! நமது மன்னர் போரிலே வெற்றி பெற்று வேங்கிநாட்டு மன்னனை கொன்று படையினரை புறமுதுகு காட்டி ஓட விட்டு விட்டார். பரிவாரங்களுடன் மன்னர் அரண்மனைக்கு வந்துகொண்டிருக்கின்றார். என் மனம் இப்போதுதான் அமைதியுறுகின்றது மந்திரியாரே. மிக்க நன்றி! என் மனமுகந்த தகவலை விளம்பியதற்கு. வாருங்கள் சேடிப் பெண்களே மன்னனை அரண்மனை வாசலிலேயே வைத்து ஆரார்த்தி எடுத்து வரவேற்போம். என்று அந்தப்புரத்து சேடிப்பெண்கள் சதிதம் அரண்மனை வாசலுக்கு விரைந்தாள் சோழ அரசின் மகாராணி
Read Moreஇலங்கையின் ஆறாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான, மிகவும் கடுமையான போட்டி நிலவும் என எதிர்பார்கப்பட்ட தேர்தல் இன்று (27-01-2010) கணிப்புக்களை தவிடுபொடியாக்கி நிறைவினை நோக்கி வந்துள்ளது. சற்று முன்னர் தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸ்ஸநாயகத்தினால் உத்தியோக பூர்வமாக வெளியிடப்பட்ட அறிக்கையின் படி அதிமேதகு ஜனாதிபதி மகிந்த இராஜபக்ஜ அவர்கள் 6.01 மில்லியன் வாக்குகளைப் பெற்று முன்னிலையில் ஆறாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தன்னோடு போட்டி இட்ட முன்னாள் இராணுவத் தளபதி சரத்
Read Moreமூன்று இலட்சம் மக்களின் கண்ணீரும், இருபதாயிரம் மக்களின் இரத்தமும், அவர்களின் மண்ணிலேயே சிந்தவைத்தது- ஒருவரின் உத்தரவினால் எனில், அவரின் அதிகாரத்தினை உடைத்து வெறும் ஜடமாக உட்காரவைப்பதே அவருக்கு நாம் திருப்பி அடிக்கும் மரண அடி. ஏழையின் கண்ணீர் கூரிய வாளை ஒக்கும் என்ற கூத்தவைப்புலவனின் வாக்கைப் பொய்க்க விடலாமா??? எய்தவன் இருக்க அம்பினை நோவானேன்.. எய்தவனை அவன் எய்த அம்பினால் திருப்பியடிப்பவனே சாணக்கியன். சத்திரியனாய் வாழ்ந்தது போதும் சாணக்கியனாகுவோம்!!!! இந்தப் பூமிப்பந்தில் தமது வாழ்வினை நிலைநிறுத்துவதற்காக உயிரினைக்
Read Moreஇஞ்சி குடுத்து மிளகு வாங்கிய வரலாறு அந்தக் காலம். ஆனால் மந்திரவாதியை விரட்ட பேய் ஒன்றினை வரவைக்க வேண்டிக்கிடக்கின்றது இன்றைய காலத்தில். 2010 ஜனவரி 26 – இலங்கை சோசலிசக் குடியரசின் 6ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியினைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் நடைபெறவுள்ளது. முப்பது வருடங்களாக தமிழரின் உரிமையை மீட்டெடுக்க தமிழீழ விடுதலைப் புலிகளால் நடாத்தப்பட்ட இலங்கை அரசுடனான போரின் முடிவுரை தற்போதைய ஜனாதிபதியினால் கடந்த ஆண்டின் நடுப்பகுதியில் எழுதி வைக்கப்பட்டது. பல்லாயிரம் அப்பாவி உயிரகளைக்
Read Moreமனிதனை ஏனைய விலங்களில் இருந்து வேறுபடுத்தி அவனுக்கேன்று தனித்துவத்தைக் கொடுப்பது அவனின் பேச்சாற்றல். இந்தப் பேச்சுத்திறமை என்பது இன்று நேற்று வந்த ஆற்றல் அல்ல. பல நீண்ட பரிணாம வளர்ச்சிப் பின்னணி இந்த பேச்சாற்றலோடு தொடர்புடைய மொழிப் பிரயோகத்திற்கு உண்டு. இவ்வாறு பல வளர்ச்சிகளைக் கடந்து இன்று தனக்கென்ற தான் பயன்படுத்தப்படும் பிரயோக நிலைகளில் தனது தனித்துவத்தைப் பேணுகின்றன ஒவ்வோர் மொழியும். ஒவ்வோர் சமூகத்திற்குமான கலாச்சார விழுமியக் கோட்பாடுகளின் கட்டமைப்பிலான ஒழுங்கமைப்புகள் மொழி என்னும் அடித்தின் மீதே
Read Moreதமிழ்மொழியின் சக்தி! எத்தகைய செய்தியையும் முதலில் முந்திக்கொண்டு முதலில் மக்களுக்குத் தருபவர்கள் நாங்கள். தெரிவிப்பது நாங்கள் தீர்மானிப்பது நீங்கள். இவை இலங்கையில் தம்மை முக்கியமான முதன்மையான தொலைக்காட்சியாகக் காட்டிக் கொள்ளும் சக்தி தொலைக்காட்சியின் அலங்கார மகுடங்கள். இலங்கையில் தொலைக்காட்சி வரலாற்றில் சக்தி தொலைக்காட்சிக்கு முக்கியமான இடம் உண்டென்றால் அது யாராலும் மறுக்க முடியாது. பல புதிய விடையங்களை அறிமுகப்படுத்தி இலங்கைத் தொலைக்காட்சிகளில் முக்கியமான இடத்தைத் தனதாக்கிக் கொண்டது உண்மைதான். ஆனாலும்… சக்தித் தொலைக்காட்சியில் தமது தயாரிப்பு என்றும்
Read More