மலரும் புத்தாண்டு என்றும் எல்லோருக்கும் சுகம் தரும் இனிய நல்லாண்டாக அமைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன். கடந்த போன காலங்கள் தந்த வலிகளும் வடுக்களும் விலகி எல்லோர் வாழ்விலும் சந்தோசம் நிலவ வேண்டும்.
சுகம் தரும் புதுத்தென்றல் எங்கும் பரவட்டும். விழிகளில் வடியும் கண்ணீர்த் துளிகளை அவை போக்கிடட்டும். உறவுகளையும் சொந்த வீடு வாசல்களையும் இழந்து வாழ்க்கையின் அர்த்தம் தேடும் அனைத்து உறவுகளுக்கும் வாழ்க்கையில் வசந்தம் மலர 2009ம் ஆண்டு வழிகோலட்டும்.
இனிய புத்தாண்டு வாழ்த்துக்களுடன் சுபானு.
Categories: வாழ்த்துக்கள்
தேடிச் சோறு நிதந் தின்று – பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி – மனம்
வாடித் துன்பமிக உழன்று – பிறர்
வாடப் பல செயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப் பருவமெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின்மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ?
நின்னைச் சில வரங்கள் கேட்பேன் – அவை
நேரே இன்றெனக்குத் தருவாய் – என்றன்
முன்னை தீய வினை பயன்கள் – இன்னும்
மூளா அழிந்திடல் வேண்டும்.
இனி என்னை புதிய உயிராக்கி – எனக்கேதும்
கவலையரச் செய்து – மதி
தன்னை மிக தெளிவு செய்து – என்றும்
சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.
என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்…
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!
புத்தாண்டு வாழ்த்துகள் தேவைதானா இப்பொழுது?
//
மலரும் புத்தாண்டு என்னும் எல்லோருக்கும் சுகம் தரும் இனிய நல்லாண்டாக அமைய இறைனைப் பிரார்த்திக்கின்றேன்.
//
நானும் பிரார்த்திகிறேன்.
நன்றிகள் .. உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.. 🙂
உறவுகளையும் சொந்த வீடு வாசல்களையும் இழந்து வாழ்க்கையின் அர்த்தம் தேடும் அனைத்து உறவுகளுக்கும் வாழ்க்கையில் வசந்தம் மலர 2009ம் ஆண்டு வழிகோலட்டும்.
உங்களுக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்.
ஆதிரை உங்களுக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள். 🙂